“முக்கியமான ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகளை மாத்திரம் மக்கள் கவனத்தில் கொள்வது சிறந்தது.” – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

“கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியான சூழ்நிலையில், முக்கியமான ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகளை மாத்திரம் மக்கள் கவனத்தில் கொள்வது சிறந்தது.” என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அமைதிக்கான ஐரோப்பிய மையம் மற்றும் மேம்பாட்டு மையம் (ஈ.சி.பி.டி) ஏற்பாட்டில், ஜூம் வழியாக  நடைபெற்ற வெகுஜன மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்புகளுக்கான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது,

“கொரோனா வைரஸ் அச்சுறுத்தலான இந்த காலப்பகுதியில் ஊடகங்கள் கூறப்படுகின்ற செய்திகளின் வேறுபாட்டினால் மக்களிடையே குழப்பநிலை ஏற்படுகின்றது.மேலும் ஊடகங்கள், பிரபலம் அடைவதனையே நோக்காக கொண்டுச் செயற்படுகின்றது. இதனால் பொதுமக்களுக்கு  என்ன கொடுக்கக்கூடாது என்பதில் கவனம் செலுத்துவதை விட வெவ்வேறு ஊடக நிறுவனங்களுடன் போட்டியிடும் சூழ்நிலைகளே அதிகம் காணப்படுகின்றது.

இதனால் ஊடகங்களை இரு முனைகள் கொண்ட ஆயுதமாகக் கருதலாம். அதாவது இது மக்களை அமைதிப்படுத்தலாம், நேர்மறையான பதிலுக்கு அவர்களை ஊக்குவிக்கலாம் அல்லது மக்களை பயமுறுத்துகிறது மற்றும் மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இரண்டாவது விடயத்தில், ஊடகங்கள் ஒரு அழிவுகரமான ஆயுதமாக இருக்கும்.

ஏனெனில் ஒரு நெருக்கடியின்போது செய்யக்கூடிய மிகப்பெரிய சேதம் உடல் அழிவை விட மனநிலையை எதிர்மறையாக மாற்றுகிறது. எனவே எந்த நேரத்திலும் எந்த நாட்டிற்கும் ஒரு நெறிமுறை மற்றும் நம்பகமான ஊடக கலாச்சாரம் இருப்பது இன்றியமையாதது.

இதன் ஊடாக ஒரு நெருக்கடியின் போது, ​​ஊடகங்கள் பொது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், பொதுக் கருத்தை நேர்மறையான அணுகுமுறையுடன் கட்டுப்படுத்தவும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியில் ஈடுபட முடியும். எனவே, இந்த சூழ்நிலைகளில்,  முக்கியமான ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகளை மாத்திரம் மக்கள் கவனத்தில் கொள்வது சிறந்தது.

அப்போதுதான் மக்களிடமும் முரணான, குழப்பமான சூழ்நிலை ஏற்படாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *