கடந்த வருடம் முதல் உலகையே பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸினுடைய வீரியம் குறைந்தபாடில்லை. தினமும் புதிய பரிமாணத்தில் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகின்றது கொரோனா. இதன் ஒரு வகையான டெல்டா இந்தியாவில் கண்டறியப்பட்டிருந்ததது. அதனுடைய தாக்கம் இந்தியாவில் மட்டுமல்லாது பல நாடுகளில் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
வேகமாக பரவி வரும் இந்திய டெல்டா கொவிட் வகை முதலில் பதிவான தெமட்டகொட பகுதியில் மேலும் 15 பேருக்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவர்கள் எந்த வகையான கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய தொடர்புடைய மாதிரிகள் ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தெமட்டகொட அராமயா சாலை பகுதியில் மொத்தம் 129 பேர் பி.சி.ஆர் சோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 15 பேருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதுள்ள ஆபத்தை கருத்தில் கொண்டு, தெமட்டகொட அராமய சாலை பகுதியில் உள்ள மக்களுக்கான கொவிட் தடுப்பூசி பிரசாரம் தொடங்கப்பட்டது.