300 டோஸ் தடுப்பூசிகளை உறவினர்களுக்கு வழங்குவதற்காக , தடுப்பூசி மருந்தொன்றை 10 பேருக்கு வழங்கிய மருத்துவர் !

இலங்கை  துறைமுக அதிகார சபை ஊழியர்களுக்கு அந்த சபையின் மருத்துவர் ஒருவர் , அஸ்ட்ராசெனகா தடுப்பூசி மருந்தொன்றை 10 பேருக்கு வழங்கியிருப்பதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும் துறைமுக ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 300 டோஸ் தடுப்பூசிகளை துறைமுக அதிகார சபையின் பிரதான வைத்திய அதிகாரி தனது உறவினர்கள் மற்றும் நெருங்கமானவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் சுயாதீன துறைமுக ஊழியர் சங்கத்தின் தலைவர் லால் பங்கமுவ கருத்துத்தெரிவித்துள்ள போது,

குறித்த வைத்தியரால் ஒரு டியூபில் இருந்து 12 முதல் 13 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு மீதப்படுத்திக் கொண்ட சுமார் 300 டோஸ் தடுப்பூசிகளை அவரின் உறவினர்களுக்கு மற்றும் நெருங்கமானவர்களுக்கு வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குறித்த வைத்தியர் தற்போது கட்டாய விடுமுறையில் உள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு தகவல்களை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *