மிக நீண்ட காலமாக தமிழர் தரப்பினரால் கைது செய்யப்பட்டு சிறைகளிலுள்ள அரசியலட கைதிகள்தொடர்பில் எந்த ஒரு ஆரோக்கியமான நகர்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதே உண்மை. கைது செய்யப்பட்டுள்ளவர்களை காணாமலேயே அவர்கள் விடுதலையை வலியுறுத்தி போராடிய உறவுகள் பலரும் இறந்து போயுள்ளனர்.
இந்நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பெரும்பான்மை ஆதரவோடு ஆட்சி பீடமேறியுள்ள அரசின் பிரதிநிதியான நாமல்ராஜபக்ஷ நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்து பேசியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ,
“பேஸ்புக் பதிவின் அடிப்படையில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசாங்கம் கைது செய்துள்ளதாகவும் இந்த இளைஞர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான், பிணையில் விடுதலை செய்யப்பட்டமை போன்று குறித்த இளைஞர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரினார்.
மேலும் இந்த விவகாரம் குறித்தும் ஏற்கனவே பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ஷ, அரசாங்கம் எடுக்கும் முயற்சியை சீர்குலைக்க வேண்டாம் என்றும் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உள்ள நிலையில் நேற்று மட்டும் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்றும் கேள்வியெழுப்பினார்.
மேலும் அரசியல்கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது, சாணக்கியன் போன்றவர்களின் அரசியல் செயற்பாடுகள் நிறைவுக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில் கருத்து வெளியிடுவதாக குற்றஞ்சாட்டினார்.