வடக்கில் அதிகரிக்கும் வன்முறைச் சம்பவங்கள் – சந்தேகநபர்கள் கைதானதாய் தகவல் இல்லை ..?

இலங்கையின் வட பகுதியில் நாளுக்குநாள் வன்முறைக்கலாச்சாரம் உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கின்றது. வாள் வெட்டு தொடர்பான சம்பவங்கள் பொதுவெளியில் இடம்பெறுகின்ற அளவுக்கு வன்முறைக்குழுவினர் தைரியமானவர்களாக உள்ளனரா..? அல்லது பொலிஸாரினுடைய பலவீனமான தன்மை காரணமாக இந்த குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றனவா எனத்தெரியவில்லை.  குறிப்பாக யாழில். அண்மைக்காலமாக வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் வாள்வெட்டு சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று(புதன்கிழமை) மீசாலை – புத்துார் சந்தியில் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகின்றது.

சம்பவத்தில் மந்துவில் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேருந்தில் பயணித்த குறித்த இளைஞன் மீசாலை – புத்துார் சந்தியில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் இளைஞனை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில் தலை, கை, கால் ஆகியவற்றில் காயமடைந்த இளைஞன் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *