எம்.பி பதவியிலிருந்து ஜயந்த கெட்டகொடவின் விலகியதையடுத்து வெற்றிடமாக உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய
பட்டியல் இடத்தை நிரப்புவதற்கு பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல் ஆணையத்துக்கு முன்மொழியப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் எம்.பி. ஜயந்த கெட்டகொட தனது பதவி விலகல்
கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ள நிலையிலேயே காலியாக உள்ள தேசிய பட்டியல் இடத்தை நிரப்ப பசில் ராஜபக்ஷவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது