“தமது கோரிக்கைக்காக ஆசிரியர் சங்கம் 43 இலட்சம் மாணவர்களை பகடையாக பயன்படுத்துகின்றது.” – கெஹெலிய ரம்புக்வெல்ல காட்டம் !

கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்கு 43 இலட்சம் மாணவர்களை பகடையாக வைப்பது எந்தளவுக்கு நியாயமானது ..? என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆசிரியர் சங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் செய்யப்பட்டனர். இதன் போது ஆசிரியர் சங்கத்தலைவரான ஜோசப்ஸ்டாலினும் கைதாகியிருந்தார்.மேலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் அவர்கள் விடுவிக்கப்படாது தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆசிரியர் சங்கம் தன்னுஐடய கற்பித்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக அறிவித்து பல இடங்களில் இணைய வழி கற்றல் நடைபெறாதுள்ளது.
இந்நிலையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதால் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்விடயத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளும் கிடையாது.
இக்காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்கள் இணையவழிக் கல்வி நடவடிக்கைளிலிருந்து விலகியுள்ளமை படுமோசமான செயற்பாடாகவே கருத வேண்டும் , கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்கு 43 இலட்சம் மாணவர்களை பகடையாக வைப்பது எந்தளவுக்கு நியாயமாகும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இலங்கை ஆசிரிய சங்கத்தினரும், தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கொவிட் -19 வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு போராட்டங்கள் மற்றும் ஒன்றுகூடலுக்கு மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளன.

அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு புறம்பாகவே இவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன் காரணமாக கைது செய்யப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் தொடர்பிலான தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவில்லை. சுகாதார தரப்பினரது பரிந்துரைகளுக்கமையவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் எவ்வித அரசியல் நோக்கங்களும், தலையீடுகளும் காணப்படவில்லை.

தனிமைப்படுத்தலிலுள்ளவர்கள் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதினால் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம். அதற்கான பல வழிமுறைகள் காணப்படுகின்றன. இவர்களுக்கு சார்பாக ஆசிரியர்கள் இணையவழிக்கல்வி நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளமை முற்றிலும் தவறான செயற்பாடாகும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் கல்வித் துறைக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளன. மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்த பிரத்தியேக தொலைக்காட்சி அலைவரிசைகளை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *