நான்கு கட்டங்களாக நிரந்தர மீளக்குடியேற்றம் – பசில் ராஜபக்ஷ எம்.பி

vanni.jpgகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்தோர் நான்கு கட்டங்களாக சொந்த இட ங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நான்கு கட்டமாக முன்னெடுக்கப்படும் இந்த உறுதியான திட்டத்தின் மூலம், ஏப்ரல் மாதமளவில் அவர்களது சொந்த இடங்களில் நிரந்தரமாக குடியேற்ற முடியுமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  கடந்த வியாழனன்று அமைச்சுக்களின் செயலாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளையும் வசதிகளையும் அரசாங்கம் முழுமையாகச் செய்து வருகிறது. அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.

புலிகளின் பிடியிலிருந்து கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு முதல்நாள் சூடான சாப்பாடும், சிற்றுண்டிகளும் வழங்கப்படுகின்றன. அதன் பின்னர் அவர்கள் இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். யு.என். எச். சி. ஆர். மற்றும் ஐ.ஓ.எம். நிறுவனங்கள் இவர்களுக்கான கூடாரங்களை வழங்கவுள்ளதெனவும் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். சுகாதார அமைச்சு தேவையான அனைத்து சுகாதார ஏற்பாடுகளையும் செய்துள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *