கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் ஒரே நாளில் 66 பேர் பலி !

நாட்டில் மேலும் 66 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (28) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,351 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையும் இன்றுடன் 304,161 ஆக அதிகரித்துள்ளதுடன், தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 273,496 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *