இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது, பிரித்தானிய கட்டுப்பாடுகளை மீறிய இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்குமான தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நிரோஷன் திக்வெல்லவிற்கு 18 மாதங்கள் போட்டித் தடையும், தனுஷ்க குணதிலக்க மற்றும் குசல் மென்டீஸ் ஆகியோருக்கு 24 மாதங்கள் போட்டித் தடையும் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு இந்த தண்டனையை பரிந்துரை செய்துள்ளது.
தனுஷ்க குணதிலக்க, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டீஸ் ஆகியோர், இன்று (29) இந்த குழுவின் முன் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.