கொரோனாவிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர் கொரோனா தாக்கி மரணம் – யாழில் சம்பவம் !

கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலியைச் சேர்ந்த ராஜா ரமேஸ்குமாரன் (வயது – 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர், சுயநினைவற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *