புத்தளத்தில் மறுவாக்களிப்பு 21ஆம் திகதி! தேர்தல்கள் திணைக்களம் இன்று அறிவிப்பு

sri-lanka-election-01.jpgபுத்தளம் தேர்தல் தொகுதியில் ரத்துச் செய்யப்பட்ட நாயக்கர்சேனை தமிழ் மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் வாக்களிப்பை நடத்துவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பின்போது இந்த வாக்களிப்பு நிலையத்தில் மோசடி இடம்பெற்றதாக புத்தளம் தெரிவத்தாட்சி அதிகாரியினால் அறிவிக்கப்பட்டதையடுத்து இதன் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க ரத்துச் செய்தார்.

இந்த வாக்களிப்பு நிலையத்தின் முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக புத்தளம் தேர்தல் தொகுதியின் இறுதி முடிவுகளை அறிவிப்பது பிற்போடப்பட்டுள்ளதுடன்ää புத்தளம் மாவட்ட மற்றும் வடமேல் மாகாண இறுதி முடிவுகளும் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *