இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனாத் தொற்றின் முதலாவது அலையில் 13 பேரும், இரண்டாவது அலையில் 596 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பெருமளவான மரணங்கள் மூன்றாவது அலையிலேயே பதிவாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 5 நாட்களுக்குள் மாத்திரம் 1,041 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஓகஸ்ட் 24ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இம்மரணங்கள் பதிவாகியுள்ளன.
24ஆம் திகதி 214 பேரும், 25ஆம் திகதி 209 பேரும், 26ஆம் திகதி 214 பேரும், 27ஆம் திகதி 212 பேரும், 28 ஆம் திகதி 192 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.