100 சதுர கிலோ மீற்றருக்குள் புலிகள் முடக்கம்; படைகளால் புதுக்குடியிருப்பு சுற்றிவளைப்பு

udaya_nanayakkara_.jpgமுல்லைத் தீவில் புலிகள் தற்போது 100 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் முடக்கப்பட்டிருப்பதாக இராணு வப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவி த்தார்.

இராணுவத்தின் இரண்டு படையணிகளும், மூன்று படைப்பிரிவுகளும் புதுக்குடி யிருப்பை சுற்றிவளைத்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

மூன்றாம் படையணி புதுக்குடியிருப்பின் தெற்காகவும், நான்காம் படையணி தென்மேற்காகவும் முன்னேறிவரும் நிலையில், 53 ஆம் படைப் பிரிவினர் புதுக்குடியிருப்பு நகருக்கு 800 மீற்றர் தொலைவை நெருங்கி விட்டதாகவும் பிரிகேடியிர் நாணயக்கார தெரிவித்தார்.

 புலிகளின் ஆயுத பலம் முற்றாக ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதே வேளை, 20-22 சதுர கிலோ மீற்றர் பரப்பைக்கொண்ட பாதுகாப்பு வலயத்தை நோக்கி பெருந்தொகையான சிவிலியன்கள் வந்துள்ளதாகக் கூறிய பிரிகேடியர், இதுவரை 35,756 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஜனவரி மாதத்தில் 3848 பேரும், பெப்ரவரி மாதத்தில் இதுவரை 31,908 பேரும் வருகை தந்துள்ளதாக பிரிகேடியர் தெரிவித்தார்.

இவ்வாறு வருகை தந்தவர்களுள் 1117 நோயாளர்களும், 494 உதவியாளர்களுமாக 1611 பேர் 5 தடவைகளில் சர்வதேச செஞ் சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கொண்டு வரப்பட்டதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *