கடன் பிரச்சினையை தீர்க்க மேலும் 250 கோடி அமெரிக்க டொலர்களை கடன் வாங்கும் அரசு !

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுவரும் பாரிய கடன் பிரச்சினையை தீர்ப்பதற்காக 250 கோடி அமெரிக்க டொலர்களை சர்வதேச சந்தையிலிருந்து கடனாகப் பெற முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

எரிசக்தி அமைச்சு இதற்கான பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கன்செப்ட் குளோபல் என்கின்ற நிதி நிறுவனத்தின் ஊடாக இந்த பெருந்தொகை கடனைப் பெறவுள்ளதோடு, அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

இரண்டு வருட நிவாரண காலத்துடன் சேர்த்து இந்த கடன் தொகையை 12 வருடங்கள் என்ற அடிப்படையில் மீளச்செலுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்படவுள்ளது. 03 சதவீத வருட வட்டி இதற்காக விதிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *