பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க தயாராகும் இலங்கை – எதிர்ப்பு தெரிவித்துள்ள பேராசிரியர் திஸ்ஸ விதாரண !

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்காக தடுப்பூசி வழக்கும் வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுவர் நோய் நிபுணர்களின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளதது என அதன்  வைத்திய நிபுணர் ஆர்.எம்.சுரன்ன பெரேரா தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக நாள்பட்ட நோய்கள் கொண்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் இருந்து அவர்களுக்கான பைசர்  தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் நாட்டில் தற்போது பாடசாலை திறப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்படவில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டாம் என்றும் இது குறித்து ஆராயும்படியும் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் சினோபாம் அல்லது ஸ்புட்னிக் தடுப்பூசிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

தொலைக்காட்சி செவ்வி ஒன்றில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *