“அரசியல் மயமான இலங்கையின் மத்திவங்கி.” – ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை !

ஒரு நாட்டின் மத்திய வங்கி அரசியலாக்கப்பட்டால் அது பொருளாதாரத்தை பாதிக்கும் என ஐக்கிய
மக்கள் சக்தியின் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த அனைத்து நாடுகளும் சரியான உதாரணங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

ஒரு சுயாதீன நபரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் ஸ்தாபக உறுப்பினர் என்றும், இன்னும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், அத்தகைய ஒரு நபர் தனது அரசியல் நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஆளுநராக நியமிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *