முதலீட்டா ளர்கள் அச்சமின்றி கிழக்குக்கு விஜயம் செய்து தொழிற்துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணாஅம்மான்) அழைப்பு விடுத்தார். கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குமார வெல்கமவின் தலைமையில் அவரது அமைச்சில் நடைபெற்ற கிழக்கு மாகாணத்தில் முதலீட்டு வாய்ப்புக்கள் என்ற தொணிப்பொருளிலான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக பல பகுதிகளிலம் முதலீடுகளை மேற்கொண்டு வரும் முதலீட்டாளர்களே கிழக்கை நோக்கி வாருங்கள். அங்கு உங்கள் முதலீடுகளைச் செய்து கிழக்கு மாகாணத்தின் முன்னேற்றத்துக்காக ஒத்துழைப்பு வழங்குங்கள். நீங்கள் எவ்வித அச்சமும்கொள்ளத் தேவையில்லை அங்கு பூரண அமைதி நிலவுகின்றது என்பதற்கு நாம் உத்தரவாதம் அளிக்கின்றோம்.
வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படாமைக்கு சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் இருந்த பிரதிநிதிகளே காரணமே அன்றி அரசாங்கம் அல்ல. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிழக்கையும் கிழக்கு மக்களையும் நன்கு கவனிப்பார்; என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது.
பல தசாப்தங்களின் பின்னர் ஜனாதிபதியின் ஆலோசணைக்கு இணங்க வடக்கிலும் கிழக்கிலும் பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் இப்பிரதேசங்களில் உங்களுக்கும் முதலீடுகளைச் செய்வதற்கு வாய்ப்பக்கிட்டியுள்ளது. கிழக்குக்கு ஒரு முறை வந்து பாருங்கள். அங்கு நீங்கள் விரும்பிய உங்களுக்குத் தகுதியான துறைகளில் உங்கள் முதலீடுகளைச் செய்யுங்கள். உங்களுக்குத் தேவையான வசதிகள் அரசாங்கத்தால் செய்து கொடுக்கப்படும். பயிர்ச்செய்கைக்கு ஏற்ற மண்வளத்தை கிழக்கு மாகாணம் கொண்டுள்ளது.
சுற்றுலா ஹோட்டல்கள், தொழிற்சாலைகள், மீன்பிடித்துறை சார் தொழிற் துறைகள், விவசாயத்துறை என எந்தத் துறையிலும் உங்கள் முதலீடுகளைச் செய்யலாம் அவற்றுக்கு வேண்டிய காணிகள் மற்றும் உதவிகளை வழங்க நாம் காத்திருக்கிறோம் என விநாயகமூர்த்தி முரளீதரன் மேலும் தெரிவித்தார்.
saam
இதெல்லாம் சின்ன மாஸ்ரர் சொல்லிதந்த வேலைத்திட்டங்கள் என்பது தெரிகிறது. ஆனால் அந்த மாஸ்ரர் இப்போது எங்கே?? உங்களுடன் இல்லையா? அல்லது உயிருடன் இல்லையா?
xavier
why? u runout of money? thats was quick wont it? its not easy as it was before
palli
// நீங்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை அங்கு பூரண அமைதி நிலவுகின்றது என்பதற்கு நாம் உத்தரவாதம் அளிக்கின்றோம்.//
கருனா இருப்பாராம் பயமின்றி வரட்டாம். நீர் புலியாகி பின்பு மக்கள் புலியாகி இப்போது சிங்கமாகியுள்ளீர்கள். ஆனால் ஒரு நிலையில் கூட மனிதனாக இருக்கவேண்டும். திருந்த வேண்டும் என நினைத்ததுண்டா?? எப்போ பார் ரத்த வாடை ரத்த வாடை. உம்மை பார்த்து உமது குட்டிபுலி குழந்தயானே குலைப்பன் காச்சலில் திரிவதாக சொல்லும்போது யாம் இருக்க பயம் வேண்டாமென முருகன் வாசகத்தை சூரன்னாகிய நீங்கள் பேசுவது உம்முடைய கொலைதகுதிக்கு நல்லாவா இருக்கு.