கஷ்டப் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு தினசரி ஒரு குவளை பால். – விவசாய அமைச்சு நடவடிக்கை !

வறிய பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்கும் நோக்கில் அவர்களது நலன் கருதி சிறிய அளவிலான 6 பால் பதப்படுத்தும் நிலையங்களை அமைக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கஷ்டப் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு ஒரு குவளைப் பால் வழங்கும் நோக்கில் இந்த நிலையங்கள் கட்டப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.

குறித்த பால் பதப்படுத்தம் நிலையங்கள் 13.9 மில்லியன் யூரோ பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்படுகின்றன.

ஒவ்வொரு பால் பதப்படுத்தும் நிலையத்தில் இருந்தும் ஒரு நாளைக்கு 5,000 லீற்றர் வீதம் இந்த ஆறு நிலையங்களில் இருந்து ஒரு நாளைக்கு 30,000 லீற்றர் பால் பதப்படுத்தப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *