சர்வதேச அபிவிருத்தி மதிப்பீடு பயிற்சி கருத்திட்ட அங்கத்தவர்கள் வியாழக்கிழமை பாராளுமன்றம் வந்திருந்தனர்.
சபாநாயகர் கலரியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருந்த இவர்களை சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார சபைக்கு அறிமுகப்படுத்தி நல்வரவு கூறி வரவேற்றதுடன், சபையிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் மேசையைத் தட்டி அவர்களை வரவேற்கும் முகமாக ஆதரவு வெளியிட்டனர்.