மேல் மாகாண நீர் வழங்கல் பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை நீர் வெட்டு அமுலில் இருக்குமென நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர் விநியோகத் திருத்த வேலைகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.