ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு சம்பள முரண்பாடுகள் மாத்திரம் காரணமல்ல என ஐக்கிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கல்வித் துறையிலுள்ள பல பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கின என அச்சங்கத்தின் பொது செயலாளரான சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை என்பது 24 வருடகால பிரச்சனை என்றும் அவர் தெரிவித்தார். பொது மக்கள் தங்கள் போராட்டத்தை புரிந்துக்கொள்ள வேண்டும்.
இலவச கல்வியின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், கல்வி முறையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தவும் போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.