இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த சூழலில், அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழுவில் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழுவில் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமியை நியமித்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்..
இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழுவில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவை நியமிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதோடு அந்த குழுவில் மூத்த பத்திரிகையாளர் கோவி லெனின், வழக்கறிஞர் மனு உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.