பிரேசிலில் வங்கிக்கொள்ளையில் ஈடுபட்ட 25 பேரை சுட்டுக்கொன்ற பொலிஸார் !

பிரேசில் நாட்டின் மினாஸ் ஜெராயிஸ் நகரின் பிரதான சாலையில் பல்வேறு வங்கிக் கிளைகள் மற்றும் ஏ.டி.எம் மையங்கள் உள்ளன. நேற்று அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பல் வங்கிகளுக்குள் சென்று  கொள்ளையடிக்க முயன்றது.
வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 25 பேர் பலி – குறியீடுதகவலறிந்து அங்கு வந்த போலீசார் கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். கொள்ளையர்களும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த சண்டையில் 25 கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொள்ளையர்கள் விட்டுச் சென்ற இயந்திர துப்பாக்கிகள், துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் குண்டு துளைக்காத ஆடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணையில், விடுமுறையில் வங்கிகளை கொள்ளையடிக்க இந்த குழு திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது என போலீசார் தெரிவித்தனர்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *