2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக 102 தரப்பினரிடம்பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றுக்கு மத்தியில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு பொருளாதாரத்தை மீண்டும் பலப்படுத்தும் வகையில் அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய நிறுவனங்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் வரவு – செலவுத் திட்டத்துக்கான பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், வெவ்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாவட்ட அரசியல் அதிகாரிகள், வெவ்வேறு தொழிற்சங்கள், வர்த்தக அமைப்புக்கள், இறக்குமதியாளர்கள், இளம் அமைப்புக்கள், தேயிலை, தேங்காய், ஆடை, மரக்கறி, பழங்கள், உணவு, மீன் உள்ளிட்ட தொழிற்துறைச் சார்ந்தவர்கள், தகவல் தொழிநுட்பம், இரத்தினம் மற்றும் தங்க ஆபரணத் தொழிற்துறை நிபுணர்கள், உள்ளிட்ட 102 தரப்பினரிடம் இவ்வாறு பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.