2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதார துறைக்கான நிதி ஒதுக்கீடு 20% ஆல் குறைக்கப்பட்டுள்ளதாகவும் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 3% ஆல் குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றில் இது தொடர்பில் பேசிய அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது இது தொடர்பில் தெளிவான புரிதலை பெற்றுக்கொள்ள முடியும். வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் சித்தரிப்பதாக அமைந்துள்ளது. உண்மையில் ஒதுக்கீடு கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் கோபமடைந்துள்ளனர். ஒரு கிளர்ச்சி ஏற்படும் போது, எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துவதற்கு பதிலாக அரசாங்கம் தனது கொள்கைகளை திருத்திக்கொள்ள வேண்டும். பல்வேறு சாக்குப்போக்குகளைப் பயன்படுத்துவதைத் ஜனாதிபதி தவிர்க்க வேண்டும்..
அதற்கு பதிலாக மக்கள் செவிசாய்க்கவும், ஏனையவர்களின் குறைகளைக் காணக்கூடாது என்பதற்காக தனது கொள்கைகளை திருத்தவும் அவர் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.