வன்னியிலிருந்து காயமடைந்து வந்தவர்களை பொலனறுவை ஆஸ்பத்திரிக்கு மாற்றுவது நல்லதல்ல-ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை

batticolo1.jpgமுல்லைத் தீவில் யுத்த சூழ்நிலை காரணமாக காயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை பொலனறுவை வைத்தியசாலைக்கு மாற்றுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமற்றதென மட்டக்களப்பு திருகோணமலை ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கடல் வழியாக அழைத்து வரப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் 178 பேர் வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி காரணமாக பொலனறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை;

திருகோணமலை வைத்தியசாலையில் இட நெருக்கடி ஏற்பட்டிருப்பதைத் தவிர்க்கும் வகையில் இவர்கள் மாற்றப்பட்டிருந்தாலும் மட்டக்களப்பு போன்ற தமிழ் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு இவர்களை மாற்றுவது தற்போதைய சூழ்நிலைக்குப் பொருத்தமானது என்றும் குறிப்பிட்டார். பொலனறுவை வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட சகலரும் பெரும்பான்மை இனத்தவரின் மொழியான சிங்களம் பேசுபவர்கள். சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளவர்களைப் பொறுத்தவரை தமிழ் மொழி பேசுபவர்கள் இதனால் மொழி ரீதியான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை உறவினர்கள் சென்று பார்வையிடுவது என்றால் பாதுகாப்புக் கெடுபிடிகள், போக்குவரத்து கெடுபிடிகள் அங்கு தங்கியிருப்பவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம்கொடுக்க வேண்டியுள்ளது. அது மட்டுமல்ல அங்கு சேவையாற்றுபவர்கள் சேவை மனப்பான்மையுடன் இவர்களுக்கு சேவையாற்றினாலும் மக்களையும் விடுதலைப் புலிகளாக கருதுபவர்களும் உண்டு.

ஏற்கனவே உறவினர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட இவர்கள் அங்கிருந்து அறிமுகமில்லாத இடமொன்றிற்கு மாற்றப்பட்டிருப்பதானது அவர்களிடையே தனிமைப்படுத்தப்பட்ட உணர்வுகளை ஏற்படுத்துமென்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், தனக்குக் கிடைத்துள்ள தகவல்களின் படி அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடையே ஒருவித அச்சமும் பீதியும் இருப்பதை அறியக் கூடியதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *