சுடரொளி பத்திகையின் ஆசிரியர் வித்தியாதரன் இன்று முற்பகல் 9.45 அளவில் கடத்திச்செல்லப்பட்டுள்ளார் என கொழும்பின் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. புறநகர் கல்கிஸ்ஸையில் வைத்து வெள்ளை வேனில் வந்தவர்களால் கடத்திச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்கிஸ்ஸையில் உள்ள மஹிந்த மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த பூதவுடல் ஒன்றுக்கு அஞ்சலி செலுத்த சென்ற நேரத்திலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவருகின்றது.