தொடர்ந்தும் வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள் !

இலங்கையில் இருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் இந்த வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கை, 1 இலட்சத்தை கடந்துள்ளதாக  பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் சராசரியாக  2 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால் கடந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  53 ஆயிரமாக அதன் எண்ணிக்கை குறைந்திருந்தாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *