குற்றப் புலனாய்வுத்துறை பொலிஸாரினால் 4 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. நேற்று முன்தினம் (26.02.2009) காலை 9 மணி முதல் பிற்பகல் 01.30 மணிவரையில் குற்றப்புலனாய்வுப் பிரிவி;ன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சேனக குமாரசிங்க தலைமையில் விசாரணை இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் இறையாண்மைக்கு எதிராகவும் நாட்டில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான புலிகள் அமைப்பிற்கு ஆதரவாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருவது தொடர்பில் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது. சம்பந்தனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் பதிலறிக்கையின் பின்னர் நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானிக்கப்படும் எனத் தெரியவருகின்றது.
இதேவேளை சம்பந்தன் தெரிவித்துவரும் கருத்துக்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்போது அவரின் குடியுரிமை பறிக்கப்படுவதுடன், சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.