உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையுடன் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களில் மாணவர் அனுமதி

eastern-university.jpgவடக்கு, கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெறுவதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம், சிங்கள மாணவன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, அங்கு கல்வியைத் தொடர்ந்த அனைத்து சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இக்கொலைச் சம்பவத்தையடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடர்வதற்கு அங்குள்ள முஸ்லிம், சிங்கள மாணவர்களும் தமது ஆட்சேபனையை தெரிவித்திருந்தனர். உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற முஸ்லிம், சிங்கள மாணவர்களும் ஏனைய பகுதி பல்கலைக்கழகங்களுக்கு கல்விக்காக இடமாற்றப்பட்டனர்.

பிந்தியதாக எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களில் மாணவர்களை அனுமதிப்பது குறித்து, உயர்நீதிமன்றத்தின் அனுமதியை பெறுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்தார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *