முல்லைத் தீவு பழைய மாத்தலன் பகுதியிலிருந்து 59 பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலை கடல் மார்க்கமாக வந்து கடற் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களைக் கடற்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
இவர்கள் 59 பேரும் 5 டிங்கி படகுகள் மூலம் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்துள்ளதாகவும் இவர்களில் 11 சிறுவர்களும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை ஓமந்தைச் சோதனைச் சாவடிக்கு நேற்று முன்தினம் 120 பேர் வருகைதந்துள்ளனர். இவர்களில் 47 பெண்களும், 23 சிறுவர்களும், 25 சிறுமிகளும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
இவர்கள் 120 பேரும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளிலிருந்து ஓமந்தைக்கு வந்துசேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.