சீனா ஏன் தமிழர்களுக்கு தேவையில்லை ..? – சுமந்திரன் விளக்கம் !

“வட – கிழக்கில் சீனாவின் பிரசன்னத்தை நாங்கள் வரவேற்கவில்லை.”  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதன் படி,

வட – கிழக்கில் சீனாவின் பிரசன்னத்தை நாங்கள் வரவேற்கவில்லை என நான் தெளிவாக தெரிவித்திருப்பதுடன் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளேன். எங்கள் அரசியல் அபிலாசை என்பது ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை அடிப்படையாக கொண்டது – இந்த இரண்டு கருத்துக்களும் சீனாவிற்கு அந்நியமான விடயங்கள்.

எங்கள் அரசியல் உரிமைகளை மனிதஉரிமைகள் மற்றும் ஜனநாயக கொள்கைகளின் அடிப்படையில் வெல்வதற்கு சீனாவின் செல்வாக்கு முட்டுக்கட்டையாக விளங்கும் – சீனா எங்கள் பகுதிகளில் கால்பதிப்பதை நாங்கள் விருப்பாததற்கு இது ஒரு காரணம்.

இரண்டாவது காரணம் நாங்கள் தென்சீன கடற்பகுதியில் இல்லை – தென்சீன கடற்பகுதியில் இருந்திருந்தால் நாங்கள் சீனாவின் நியாயபூர்வமான பாதுகாப்பு கரிசனைகளை அங்கீகரித்திருப்போம்,ஆனால் நாங்கள் இந்து சமுத்திர பகுதியில் இருக்கின்றோம்,இந்திய கரையிலிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் உள்ளோம்.  இந்தியாவின் நியாயபூர்வமான பாதுகாப்பு கரிசனைகளை நியாப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பதற்காக எங்களை யாரும் குற்றம்சொல்ல முடியாது.

சீனா இந்தியாவுடன் நட்புறவு பாராட்டும் நாடு இல்லை. இதன் காரணமாக இந்திய கரைக்கு மிக அருகில் உள்ள வடகிழக்கில் சீனா காலூன்ற அனுமதிப்பது– இந்தியாவிற்கு எதிராக மேலும் பகைமை நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதற்கு அனுமதிப்பதற்கு சமமானது. என தெரிவித்துள்ள சுமந்திரன் இதனை நாங்கள் செய்யக்கூடாது என நினைக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
இந்த காரணங்களிற்காக நாங்கள் வடக்குகிழக்கில் சீனாவை விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Democracy
    Democracy

    சுமந்திரன் எதற்காக “முதலியார் முந்திரிக்கொட்டை” மாதிரி இலங்கை வெளிவிவகாரக் கொள்கையில் கருத்துக் கூறுகிறார்?
    இந்திய தமிழ்நாடு மாநிலத்திலும், இந்திய புதுதில்லி அரசே வெளி விவகாரக் கொள்கையாக சீனாவை எதிர்க்கிறது!
    ஆனால், இந்திய ‘வணிக ஜாதியும்’, பெரு முதலாளிகளும், சீனாவை ஆதரிக்கிறார்கள்!
    “கலாச்சாரப் புரட்சிக்கு எதிராக” திராவிடர் என்று லூசுத் தனமாக கூறிக் கொள்கிறவர்கள் சீனாவை எதிர்த்தால், அதையே சாக்காக வைத்து, “இராவணனுக்கு எதிராக இராமன்” என்கிற கொள்கையை புதுடில்லி எடுக்கும்!
    இதுவே இலங்கையின் வடக்கு, கிழக்கிற்கும் பொருந்தும்!

    Reply