சீனாவிலுள்ள சர்வதேச உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளது.
இலங்கையில் பசுமை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்தக் கடனுக்கு விண்ணப்பித்திருந்தது. மேற்படி வங்கி 2016 இல் நிறுவப்பட்டதுடன் இலங்கை அதன் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒன்றாகும்.
இலங்கை கோரிய கடனை வழங்குவது தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.