இலங்கை விமான நிலையங்களுக்கு நாளாந்தம் வருபவர்களில் 4 வீதமானோர் ஒமிக்ரோன் தொற்றுக்கு சாதகமாக இருப்பதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் குறித்து விளக்கமளித்த சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ், நிலைமை மோசமடைவதைத் தடுப்பதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுப்பது அவசியம் என்றார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிசிஆர் சோதனை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒமிக்ரோன் பிறழ்வு நாட்டை அழிக்கும் அபாயம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேர்மறை நோய்த் தொற்றுகளைக் கண்டறிவதற்கான செயல்முறை திறனற்றதாக இருப்பதால், அறிக்கையிலுள்ள தரவு 100% துல்லியமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் பெரும்பாலான நபர்கள், சோதனையின் போது கொரோனா தொற்றாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, விமான நிலையத்தில் பிசிஆர் சோதனையை மீண்டும் ஆரம்பிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.