நேபாளத்தில் ஜனாதிபதிக்கு பெரும் வரவேற்பு!

president_and_madam.jpgமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேபாளத்துக்குச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அங்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்று நேபாளத்தின் த்ரிபுவான் விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி மற்றும் அவரது பாரியார் சிரந்தி ராஜபக்ஷ ஆகியோரை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உபேந்திர யாதெவ் விமான நிலையத்தில் வரவேற்றார்.

நேபாளப் பிரதமர் புஷ்பகமல் தஹலின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ள ஜனாதிபதி, இவ்விஜயத்தின்போது இலங்கைக்கும் நேபாளத்துக்குமிடையிலான இருதரப்பு நல்லுறவுகள் குறித்து நேபாள ஜனாதிபதி கலாநிதி ராம்பாரன் யாதெவ், பிரதமர் புஷ்பகமல் தஹல், வெளிவிவகார அமைச்சர் உபேந்திர யாதெவ் உட்பட அந்நாட்டு அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இவ்விஜயத்தில் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம, ஜீ.எல். பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் பங்கேற்றுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *