“ஜனாதிபதியுடனான சந்திப்பு வாய்ப்பை கைநழுவ விட்டுவிட முடியாது..” – இரா.சம்பந்தன்

சுயலாப அரசியலாலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒருபோதும் பயன்படுத்த முடியாது என அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர்,

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் முகமாகவே பேச்சுவார்த்தை இடம்பெறும். மேலும் பேச்சுவார்த்தை என்ற கதவுகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த வாய்ப்பை கைநழுவ விட்டுவிட முடியாது.

அத்தோடு இந்த பேச்சுவார்த்தையின்போது, புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை அழுத்தமாக வலியுறுத்தவுள்ளோம்.

இதேவேளை கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான டெலோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியுடன் பேசக்கூடாது என்று கூறவில்லை. ஜனாதிபதி பேச்சுக்கு அழைப்பதில் சந்தேகம் இருப்பதாக மட்டுமே அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து பங்காளிக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *