“வடக்கை முழுமையாகக் கைப்பற்றியவுடன் அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது. அரசியல் தீர்வைத் தயாரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம். தமிழ் மக்களின் நலன்கருதி கூட்டமைப்பு இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்படும் என எதிர்பார்க்கின்றோம்” என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் சில தமிழ் கட்சிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேச சமூகமும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.