21 ஆவது நாளாகவும் போராட்டம் – கண்டு கொள்ளாத ராஜபக்ஷக்கள் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலிலும், அலரி மாளிகை வளாகத்திலும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் இன்றைய தினமும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, காலி முகத்திடலில் இன்று(வெள்ளிக்கிழமை) 21 ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு அப்பால் இந்த போராட்டத்தில் மேலும் பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய கடந்த காலங்களில் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாதைகளும் இந்தப் போராட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கோட்டா கோ கம எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் தொடர்ச்சியாக கலந்து கொண்டு இரவு – பகலாக அரசாங்கத்திற்கு எதிராக கோஷமெழுப்பி வருகின்றனர்.

தேசியக் கொடிகளை ஏந்தியும், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிராக பதாதைகளை ஏந்தியும் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தப் போராட்டத்தின் காரணமாக, ஜனாதிபதி செயலக வளாகம் மற்றும் அதனை அண்டியப் பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *