ஏப்ரல் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும் போது கணிசமாகக் குறைந்துள்ளது, இது சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கு அதிக சவால்கள் உள்ளன என்பதைக் குறிக்கிறது.
ஏப்ரல் 01-26 காலப்பகுதியில் மொத்தம் 55,590 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மார்ச் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஒப்பிடும் போது, மாதத்திற்கான வருகை கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைவு.
மார்ச் மாதத்தில் மொத்தம் 106,500 சர்வதேச பார்வையாளர்கள் நாட்டிற்குள் வருகைத் தந்துள்ளனர். இது இவ்வாண்டுக்கான மிக அதிக தொகையாகும்.
சுற்றுலா அமைச்சின் ஏப்ரல் மாதத்திற்கான புள்ளிவிவரங்களுக்கு அமைய நாளாந்த வருகை விகிதம் 2,138 ஆகக் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. முன்னைய மாதங்களில் நாளாந்தம் 3,500 முதல் 4,000 பேர் வரை நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.
ஜனவரி 01 முதல் ஏப்ரல் 26 வரையிலான காலகட்டத்தில் மொத்த வருகை 340,924 ஆக இருந்தது.
10,327 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன், ஐக்கிய இராச்சியம் சுற்றுலாவுக்கான மிகப்பெரிய ஆதார சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்தியா 7,900 வருகையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளதுடன்,. ஜேர்மனி 5,756 சுற்றுலாப் பயணிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஏனைய குறிப்பிடத்தக்க சந்தைகளில் பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் ரஷ்யா ஆகியவை உள்ளன.