அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு இலவச பேருந்து உதவிகள் !

அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு இலவச பேருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன,

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு நாட்டில் எங்கிருந்தும் இலவசமாக பஸ்களை வழங்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றி பேருந்துகளை முற்றுகையிடவும் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, இம்மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தால் பிரசாரத்துக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *