பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஏற்றுக்கொண்டுள்ளார். அதனையடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் அலரிமாளிகையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.