திருகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கிய ராஜபக்ஷ குடும்பம் – சுற்றி வளைத்து பொதுமக்கள் போராட்டம் !

திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமை முற்றுகையிட்டு தற்போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அங்கு கூடியுள்ளனர்.

இதே நேரம் நாமல் ராஜபக்சவின் மனைவி மற்றும் மகன் உலங்குவானூர்தியில் {ஹெலிகாப்டரில்} தப்பிச் செல்லும் காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி மற்றும் அவரது மகன் கேசரா ஆகியோர் இன்று காலை கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *