எரிக்கப்பட்டது அங்கஜன் இராமநாதனின் மக்கள் தொடர்பு அலுவலகம் முன்புள்ள பதாகை !

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் மக்கள் தொடர்பு அலுவலகம் முன்பாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பதாகைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தின் முன்பாக இன்றைய தினம் (10) இரவு கூடிய சிலர் பதாகைக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

நாடு பூராக அரசாங்க ஆதரவு அரசியல்வாதிகளின் வீடுகள், அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்படும் நிலையில், இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகளின் வீடுகள், அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டு வரும் சூழலில், வடக்கு, கிழக்கிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறலாம் என முற்கூட்டியே பாதுகாப்பு அரண்கள் போடப்பட்ட நிலையில், போராட்டகாரர்கள் தீ வைத்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *