மகிந்த ராஜபக்ஸ எங்கே..? – கடற்படை தளபதி வெளியிட்டுள்ள தகவல் !

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்பாக இருப்பதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (11) தெரிவித்தார்.நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பத்தரமுல்லையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு பொலிஸ் தலைமையக மைதானத்திலிருந்து இரண்டு ஹெலிகொப்டர்கள் மூலம் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன ஒப்புக்கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படுவதாகவும், அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என உறுதியானதும் அவர் பாதுகாப்பான இடத்துக்குச் செல்வார் எனவும் பாதுகாப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *