தாயின் காதலனால் சிறுமி கர்ப்பம் – பாதுகாப்பற்ற நிலையில் இலங்கை சிறுவர்களின் எதிர்காலம் !

15 வயதுடைய மகளை வன்புணர்வு செய்த தாயின் காதலன் புத்தளை பொலிசாரால்  இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்னர், அவரது தாயார் அப்பகுதியைச் சேர்ந்த வேறொரு நபருடன் வசித்து வந்துள்ளார். அவர் சிறுமியை பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

வயிற்றில் வலி இருப்பதாக கூறி இன்று வைத்தியசாலை சென்ற சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்தனர்.

மேலும் மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி நீதித்துறை மருத்துவ அதிகாரிகளிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, 44 வயதான சந்தேக நபர் வெல்லவாய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

………………………..

இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்ச்சியாக கேளவிக்குள்ளாகி வருகின்ற நிலையில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக பாலியல் துஷ்பிரயோகங்கள் வெளி நபர்களிலிருந்து ஏற்படுவதை விட  தெரிந்த – பழகிய குடும்ப உறவினர்கள் – குடும்ப நண்பர்களினாலேயே ஏற்படுகின்றது. பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர்கள் ஆகக்கூடிய கவனம் எடுப்பதும் – பிள்ளைகளுக்கு நல்ல தொடுகை – தவறான தொடுகை என்பவற்றை அடையாளப்படுத்தி காட்டுவதும் – பிள்ளைகளுடன் பெற்றுார் நல்ல புரிதலுடனான தொடர்பை பேணுவதுமே பிள்ளைகளை பாதுகாக்க உள்ள ஒரே வழி.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *