ரஷ்ய விமானம் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் – 4 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை இழக்கும் நிலையில் இலங்கை !

ரஷ்யாவின் ‘ஏரோபுளோட் ‘ விமானம் ஒன்றினை இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து ,கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை மையப்படுத்தி உருவாகியுள்ள நிலைமையை அடுத்து ரஷ்ய சுற்றுலா பயணிகள் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்யர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்  புட்டினின் உத்தரவுக்கு அமைய அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று முற்பகல் 10.10 மணிக்கு வெறுமையாக கட்டுநாயக்கவை வந்தடைந்த ரஷ்ய விமானம் பிற்பகல் 12.50 மணிக்கு மேலும் 275 சுற்றுலா பயனிகளை ரஷ்யா நோக்கி அழைத்து சென்றுள்ளது.

இவ்வாறான நிலையில், இலங்கைக்கு சுற்றுலா வர எதிர்ப்பார்த்திருந்த சுமார் நான்கு இலட்சம் சுற்றுலா பயணிகளை இலங்கை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக சுற்றுலாத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *