பத்தரமுல்லை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நிலையில் பெண்ணொருவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.
குறித்த பெண்ணை இராணுவத்தினர் உடனடியாக காசல் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான குறித்த பெண், இரண்டு நாட்களாக வரிசையில் காத்திருந்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வருகை தந்துள்ள மக்கள் இன்றும்(07) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
……………………
இலங்கையில் பாஸ்போர்ட் பெறுவதற்காக மட்டுமல்ல எரிபொருள், எரிவாயு , நாளாந்த உணவுப்பொருட்கள் என அனைத்திற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டே இருக்கின்றனர். பிறப்புக்கள் மட்டுமல்ல 10ற்கும் மேலான மரணங்களும் இந்த வரிசைகளிலேயே சம்பவித்துவிட்டன என்பதே சோகம்.
இன்று வரை இந்த அரசாங்கமும்- அமைச்சர்களும்இந்த வரிசைக்கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இதனை வைத்து அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றனர் என்பதே சோகமான உண்மை !