ரணிலும் வெளியே – இலங்கை அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் !

பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த கலந்துரையாடலில் Zoom ஊடாக பிரதமரும் பராாளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திசாநாயக்க, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் இணைந்துகொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் அனுப்ப சபாநாயகர் தீர்மானித்துள்ளதாக ரவூப் ஹக்கீமின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம், சபாநாயகர் ஜனாதிபதி பதவியை ஏற்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் பிரதமர் பதவியிலிருந்து விலகி சர்வகட்சி அரசாங்கம் ஒன்று பொறுப்பேற்பதற்கான  வழிவகைகளை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாலும், சர்வதேச நாணய நிதியத்திற்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை வரவுள்ளதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை தாம் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் கூறியுள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *