உயிர்நீத்த மற்றும் படுகாயமுற்ற இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை பாதூகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ (17) சந்தித்து உரையாடினார். அநுராதபுரம் சாலியபுரவில் அமைந்துள்ள கஜபா படைப்பிரிவின் முகாமில் இச்சந்திப்பு இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
படை வீரர்களின் குடும்பத்தினரின் துயரங்களைக் கேட்டறிந்த பாதுகாப்புச் செயலாளர் அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து வைபவத்தில் உரையாற்றிய அவர், தாய் நாட்டை மீட்பதற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்கள் எக்காலத்திலும் நினைவுகூரப்படுவர் என்றும் நாட்டுக்காக உயிர்நீத்த தேசிய வீரர்களின் பட்டியலில் அவர்கள் பெயர்கள் சேர்க்கப்படும் என்றும் கூறினார்.